Tuesday, October 3, 2017

Typical Nagayanallur style Dhal Rasam::


 
  Daily  we need  rasam to eat , our menu includes  varieties of rasams.
  We  get kada perungayam in Trichy , that adds the super aroma to the  rasam.
   Most of caterers  use  this  perungayam  for the extra flavour.
 Srirama Navami utsavam in  Nagayanallur  is very famous ,there will be 10 days  function,
 In those days  so many people will gather to watch  programs.. I got this recipe from one of my friends  and tried  this.Now  this  one  I prepare almost every day.

















Ingredients.
Tamarind - 1 lemon size
Tomato - 1 No. (Medium Size)
Thoor Dhal -4 tsp
Salt - to taste
Rasam powder (recipe given) -1/2 teaspoon
Asafoetida -1teaspoon
Turmeric powder -! teaspoon
Mustard seeds -1 teaspoon
Cumin seeds -1 teaspoon
Black pepper powder, cumin powder - 1/4 tsp
Curry leaves - 1 ark
Coriander leaves - finely chopped
Ghee - for tempering
Rasam Powder
Red chillies 2 cups
Coriander seeds 1 cup
Black pepper and Cumin seeds - 1/5 cup
Dry fry until hand picken heat and cool it. Powder in mixie and keep in a air-tight container to maintain the aroma.
Preparation : Bring to Boil the tamarind juice for best result. Pressure cook turdal and tomato with pinch of Turmeric powder, smash it, add water and keep aside. Once tamarind juice starts boiling, add Turmeric powder, Asafoetida and other half of chopped tomato and rasam powder. Once cooked, add the smashed dal and allow to Froth. (Dont over boil). Remove and temper with Mustard Seed, Cumin Seed, Asafoetida. and transform to the rasam. Dont forget to add salt, curry leaves and chopped coriander leaves.
Now to bring to Nagayanallur Tasty Rasam. Sprinkle a1/4 tsp of mixed powder of pepper & Cumin powder above the rasam and close immediately for just 5 mins..... This gives the yummy taste and makes us to drink 1 more cup. This is being served in many of the functions in Trichy District areas. They create sheer magic that our tongues will tickle at the mere look and aroma emnating from the kitchen.

Friday, January 3, 2014

Cauliflower manchurian

காலி பிளவர்மஞ்சுரியன் :

.  போன வாரம் காலி பிளவர்  வாங்கி வந்து செய்தேன். இப்ப தான்  பூ சீசனாச்சே காலி பிளவர்  பூச்சி  புழு இல்லாமல் இருக்கும் , சீசனில் வரும் காய் எப்பவுமே  நல்ல  ருசியோடு  இருக்கும்,ஹோட்டலுக்கு  போனால் எல்லாரும்  விரும்பி சாப்பிடறது  இது தானே . அங்கெல்லாம்  food  கலர்  சேர்ப்பார்கள் . நம் வீட்டிலே செய்தால்  கலர் சேர்க்காமல் சுகாதார  முறையில்  ருசி குறையாமல் செய்யலாம்
காலி பிளவர்மஞ்சுரியன் :
 தேவை யான பொருட்கள் :
 காலிபிளவர் - 1 பெரியது
 சோள மாவு -1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
 இஞ்சி பூண்டு விழுது -1/4 ஸ்பூன்
 உப்பு - ருசிக்கேற்ப
சாஸ்  செய்ய :
வெங்காயம் -1 ஸ்பூன்  நறுக்கியது
குடமிளகாய் = 1 ஸ்பூன் நறுக்கியது
பூண்டு -2 ஸ்பூன்  நறுக்கியது
 இஞ்சி -  1 ஸ்பூன் நறுக்கியது
சோயா சாஸ் - 3/4 ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
தக்காளி கெட்ச்சப் -1/2 ஸ்பூன்
எண்ணெய்- பொரிக்க
உப்பு - ருசிக்கேற்ப
வெங்காயத்தாள் - அலங்கரிக்க
 கொத்தமல்லி - அலங்கரிக்க
செய்முறை:
பூவை வெந்நீரில் 15 நிமிடங்கள் போட்டு  , பிறகு வடிய விடவும்
ஒரு பௌலில் அரிசி மாவு + சோள மாவு  + உப்பு சேர்த்து கலக்கவும். அதனுடன்
இஞ்சி , பூண்டு விழுது  சேர்த்து ( விருப்ப பட்டால் ) லேசாக தண்ணீர்  தெளித்து  கெட்டி  மாவாக கலக்கவும் , அதில்  காலிபிளவரை  போட்டு  எல்லா பக்கமும்  படும்படி நன்றாக  முழுகும்படி வைக்கவும்.
ஒரு வாணலியில்  எண்ணெய் விட்டு அந்த  பூக்களை பொன்னிறமாக பொரித்து எடுக்கணும்.
ஒரு tissue பேப்பரில் அதிகப்படி எண்ணெய் உறிஞ்சும்படி பொரித்த பூக்களை பேப்பரில் வடிய விடவும்.
மற்றொரு  வாணலியில்  கொஞ்சம் எண்ணெய் வைத்து நறுக்கிய இஞ்சி , பூண்டு  போட்டு வதக்கி நறுக்கிய வெங்காயம்   , குடமிளகாய் சேர்த்து வதக்கி , பிறகு  சாஸ்   வகைகளை சேர்த்து  தக்காளி கெச்சப்பும் சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சம் வதக்கி  உப்பும் சேர்க்கவும்.
பிறகு  பொரித்த காலிபிளவரை சேர்த்து நன்றாக  எல்லாபக்கமும்  விழுது படும்படியாக கலந்து ( நன்றாக coat  ஆகும்படி கலந்து ) அடுப்பிலிருந்து இறக்கி , கொத்தமல்லி , வெங்காய தாள்  தூவி அலங்கரிக்கவும்.  காலிபிளவர் மஞ்சூரியன்  ரெடி


Saturday, November 30, 2013

Rava kesari # OPOS

சுலபமான  சீக்கிரமா செய்யற  ரவா கேசரி ::
 தேவையான பொருட்கள் "
 ரவா = 1 கப்
 சக்கரை-2 கப்
தண்ணீர் - 3 கப்
நெய் - 1/2 கப்
முந்திரி பருப்பு - 10 பருப்பு
ஏலக்காய்  பவுடர்- சிறிதளவு
கேசரி கலர் = சிறிதளவு
பச்சகல்பூரம் - _ (optional )
செய்முறை ::
குக்கெரில், ரவையையும்  முந்திரி பருப்பையும் சேர்த்து நெய் சேர்த்து,  முந்திரி பருப்பு லேசாக பொன்னிறம் வரும் வரை  வறுக்கவும். அதற்கிடையில்  மற்றொரு  பாத்திரத்தில்  2 கப்  சர்க்கரை ,3 கப் தண்ணீரை சேர்த்து ஒன்றாக  கரையவிட்டு கொதிக்க விடவும்.ரவை  வறுபட்டதும்  சர்க்கரை +தண்ணீர்  கலவையை  விட்டு கேசரி கலரும் ஏலக்காய் பவுடர்  போட்டு கைவிடாமல்  கிளறி  குக்கர்  மூடி போட்டு மூடி  வெயிட்  போட்டு  அடுப்பை அணைத்து விடவும்.பிறகு 15 நிமிடங்கள் கழித்து  திறந்து பார்த்தால்,   கட்டி தட்டாத  அருமையான  கலருடன்  ருசியான  கேசரி தயாராக  இருக்கும்.  கிளரிண்டே பக்கத்தில் நிற்கவேண்டாம் .
 நீங்களும் செய்து பார்த்து  எனக்கு சொல்லுங்கள் எப்படி இருந்ததுன்னு !!!

Tuesday, November 26, 2013

Rasam sadham direct in COOKER # OPOS

 COOKER  இல்  நேரடியாக  செய்த ரசம் சாதம்






தேவையான பொருட்கள்:
1)அரிசி - 3/ 4 கப்
2)துவரம் பருப்பு - 2 ஸ்பூன்

3)பயத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
4)புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (தண்ணீரில் ஒரு போட்டு கரைத்து வைத்துக்கவும்)
5)சாம்பார் பொடி-1 1/2 டீஸ்பூன் ( நான் ரச பொடி தனியாக உபயோகிப்பதில்லை )
6)உப்பு - தேவைக்கேற்ப
7)பெருங்காயம் - சிறிய துண்டு
8)தண்ணீர் - 3 - 3 1/2 கப் ( புளி தண்ணீரும் சேர்த்து)
9)தக்காளி - 1 (பெரியது ) / 2 (சிறியது ) பொடி பொடியாக நறுக்கியது
தாளிக்க :
நெய் +எண்ணெய் = 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
ஜீரகம் - 1/2 ஸ்பூன்
மிளகு பொடி - 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை -கொஞ்சம்
கொத்துமல்லி மேலாக தூவ
செய் முறை : cookeril (1 )- (9) வரை எல்லாத்தையும் போட்டு மூடி போட்டு weightum போடவும் . 4 , 5 whistle வந்ததும் அடுப்பை off செய்து விட்டு , steam அடங்கிய பிறகு cookerai திறந்து நன்றாக கரண்டியால் மசித்து விடவும் .
வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் நெய் + எண்ணெய் ( முழுவதும்
நெய்யும் விடலாம்) விட்டு கடுகு , ஜீரகம் , கருவேப்பிலை , மிளகு தூள் தாளித்து சாதத்தின் மேல் போட்டு கொத்துமல்லி தூவி மணமான ருசியான ரசம் சாதத்தை எல்லாருடனும் சேர்ந்து சாப்பிடலாம்.
Side dish : அப்பளம் , கருவடாம் poriththathu , thayir pachchadi , daangar pachchadi



1. Rice – ¾ cup

2. Thuvaramparuppu – 2 tea spoon ,

3.Payaththam paruppu – 1 teaspoon

4. Sambar powder - 1 ½ teaspoon ( as I am using not any rasam powder )

5.Salt – as required

6.Tamarind - 1 gooseberry size ( soak it in water and take the extract)

7.Water - 3 to 3 ½ cup ( including tamarind water)

8.Tomato - 1 (big size) / 2 (small size) [ cut it into small pieces]

9.Asafoetida - 1 small piece(fry and powder it and use )

For seasoning :

Oil / ghee – 2 teaspoon( some use each 1 teaspoon) Kadugu – 1 teaspoon
Jeeragam – 12 teaspoon

Pepper powder (coarsely grinded) – ¼ teaspoon

Curry leaves - 6 to 7

Fresh koththumalli leaves for garnishing

Method:

Add all the ingredients 1 to 9 in the PC ON the gas cover with lid and put the whistle . Allow to whistle upto 4 to 5 . switch off the stove . Allow to cool . Then open the lid and smash the rice with ladle. Do the seasoning and put it on the rasam rice garnish with fresh dhania leaves.

If it is served for children add one more spoon of ghee .

Enjoy the rasam rice with fried vadaams , pappad / fried veg s .

I got  prize  for this recipe from a  Facebook  group UBF (actually   first lady to get  the prize for #OPOS ) A  pressure cooker .

vaththa kuzhambu sadham #OPOS





cooker  ரிலே  நேரடியாக  வத்த குழம்பு சாதம் செய்தால்  சௌகர்யமாக  சீக்கிரமே சமையல் முடிந்து சாப்பிடலாம் , அதற்கான செய்முறை இதோ ::


அரிசி = 1/2  கப்
 புளி தண்ணீர் - ஒரு நெல்லிக்காய் அளவு புளி  கரைத்தது + தண்ணீர் = 2 கப்
 சாம்பார் பவுடர் -  1 1/2 டீஸ்பூன்
 உப்பு - தேவைகேற்ப
தாளிக்க :
நல்லெண்ணெய் -  3 டீஸ்பூன்
 கடுகு - 1 டீஸ்பூன்
 துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
 வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
 பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
 கருவேப்பிலை - 10 இலைகள்
மனத்தக்காளி வத்தல் - 1 டீஸ்பூன்
அப்பளம் - ( பிடித்தவர்கள் சேர்க்கலாம் - 1 உளுத்த அப்பளம் )
செய்முறை :
 அடுப்பில்  cookeril  நல்லெண்ணெய்  ஊற்றி  தாளிக்கும்  items  வரிசையாக சேர்த்து , தாளித்து  புளி தண்ணீர் +தண்ணீர் (மொத்தம்  2 கப்) சேர்த்து  சாம்பார் பொடி , உப்பு ,அரிசி சேர்த்து ஒரு கலக்கு கலக்கி  cookerai  whistle  வைத்து மூடி  6  whistle  வந்தது அணைத்துவிடவும்
 steam  அடங்கியதும்  திறந்து   சாப்பிடவேண்டியது தான் . அட்டகாசமான  வத்த குழம்பு சாதம் ரெடி . தொட்டுக்க , சுட்ட அப்பளம்,  கூட்டு , தேங்காய் போட்ட curry  சிறந்ததாக அமையும் .
 மத்யான  லஞ்ச்  packing , tour  lunch  packing  சூப்பர்  item

Sunday, April 28, 2013

Milagu kuzhambu

ரொம்ப நாள் ஆச்சு blog பக்கம் வந்து , இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.

இன்னைக்கு வித்தியாசமாக ....மிளகு குழம்பு ::

 எப்பவும் செய்வது தான் இருந்தாலும்  நெறைய பேரிடமிருந்து appreciation , recognition கிடைத்தல்  ஒரு சந்தோசம் தானே .சரி  தேவையான பொருட்கள்,முறை தருகிறேன்  நீங்களும் செய்து பாத்து சொல்லுங்கள்.

தேவையான  பொருட்கள் :
மிளகு                : 1 டீஸ்பூன்
கடலை பருப்பு :1 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் : 6
துவரம் பருப்பு  :  1 டீஸ்பூன்
ஜீரகம் :1/2 டீஸ்பூன்
தனியா/கொத்துமல்லி விதை : 2 டீஸ்பூன்
கட்டி பெருங்காயம் ;சிறிய துண்டம் /இல்லாவிடில் பெருங்காய தூள்
கருவேப்பிலை : 1 ஆர்க்கு
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணெய் : நல்லெண்ணெய் உபயோகிக்கவும்
புளி :ஒரு எலுமிச்சங்காய்  அளவு
மணத்தக்காளி  வத்தல் - 2 டீஸ்பூன் 
செய்முறை :
    வாணலியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் சிறிது ஊற்றி ,புளி , உப்பு,மணத்தக்காளி வத்தல்  நீங்கலாக எல்லாவற்றையும் லேசாக பொன்னிறமாக வறுத்து mixie இல் புளியுடன்  சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும் .
அடுப்பில் அதே வாணலியை ஏற்றி ,3 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி ,கடுகு,ஜீரகம் ,ஒரு ஆர்க்கு கருவேப்பிலை கொத்து ,தாளித்து மணத்தக்காளி வத்தல் சேர்த்து பொரிந்ததும் அரைத்து விழுதை நீர்க்க கரைத்து , தேவையான உப்பும் கொஞ்சம் மஞ்சள் பொடியும் போட்டு  கொதிக்க விடவும்.நன்றாக கொதித்து சேர்ந்த மாதிரி consistancy வந்ததும்
மேலாக கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு  அடுப்பிலிருந்து  இறக்கி விடவும்.
இந்த குழம்பு ரெண்டு / மூன்று நாளைக்கு நன்றாக இருக்கும்.(fridge இல் வைத்தால் ஒரு வாரம் கூட நன்றாக இருக்கும் )
 தோசை, சப்பாத்தி இட்லி ,தயிர் சாதத்துடன் சைடு dish ஆக சாப்பிடலாம் .
சூடான சாதத்துடன் கொஞ்சம் மிளகு குழம்பு சேர்த்து பிசைந்து , சுட்ட அப்பளம் . அவியல் ,டாங்கர் பச்சிடி ,நல்ல கெட்டி தயிர் இவைகளுடன் சாப்பிட்டால் அமிர்தம் போல இருக்கும் .